×

வாலிபர் படுகொலை?

ஆவடி: ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டூர் சிப்காட் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன், 400 அடி சாலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

The post வாலிபர் படுகொலை? appeared first on Dinakaran.

Tags : Kattur Chipgat ,Aavadi Tank Factory Police Station ,
× RELATED போக்குவரத்து சிக்னல்களில்...